News August 7, 2025
உலகம் அழியப் போகிறதா… பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்

எதிர்காலத்தில் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து உயிர்கள் வாழமுடியாத நிலை ஏற்படலாம் என ஜியார்ஜியா பல்கலை., விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சூரியனின் பிரகாசம் மேலும் அதிகரிக்கும் போது, அது ஆக்சிஜனின் அடர்த்தியை குறைக்கும். இதனால் அடுத்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆக்சிஜன் குறைய தொடங்கும். அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளில், இப்போதுள்ள அளவில் 10% மட்டுமே இருக்குமாம். அதுவரை பூமியில் மனித இனம் இருக்குமா?
Similar News
News August 11, 2025
1M+ டிக்கெட்.. கரியரின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!

இதுவரை எந்தவொரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு ‘கூலி’ படம் ப்ரீ புக்கிங்கிலேயே 1M+ டிக்கெட்களை விற்றுள்ளது. இன்னும் 3 நாள்கள் இருக்கும் நிலையில், இது இன்னும் அதிகரிக்கக்கூடும். ‘அண்ணாத்த’ படத்தின் தோல்வியின் போது, ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு தானே தமிழ் சினிமாவின் உச்சம் என நிரூபித்து காட்டிவிட்டார் ரஜினி. கோலிவுட்டின் கனவாக இருக்கும் 1,000 கோடி வசூலை ‘கூலி’ செய்து காட்டுமா?
News August 11, 2025
தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவை: ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். <<17339036>>பெங்களூருவின் மகாதேவபுராவில்<<>> நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல; திட்டமிட்ட சதி எனவும் அவர் சாடியுள்ளார். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
இன்று ஒரே நாளில் இந்தியா, பாக்., போர் ஒத்திகை

பஹல்காம் தாக்குதலால் பாக்.,- இந்தியா இடையே போர் பதற்றம் தொற்றியது. பாக்., பின்வாங்கியதால் தாக்குதல் கைவிடப்பட்டது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி அசிம் முனிர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அரபிக் கடலில் இந்திய கடற்படை இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுவதாக அறிவித்தது. இதனால் பதறிப்போன பாக்.,கும் இன்றே போர் ஒத்திகையில் ஈடுபடபோவதாக கூறியுள்ளது.