News August 7, 2025
ஈரோடு அரசு ஐடிஐயில் தொழில் பழகுனர் பயிற்சி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐயில், பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, ஈரோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி தொழில் பழகுனர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
Similar News
News August 7, 2025
சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தேவராஜ். இவர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து உடனடியாக கண்டறிந்து, குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
News August 7, 2025
ஈரோடு: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

ஈரோடு மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.