News August 7, 2025

இளம் பெண் தற்கொலை.. கணவர் குடும்பத்தோடு கைது

image

திருப்பூரில் ரிதன்யாவை போல் வரதட்சணை கொடுமையால் திருமணமான 11 மாதங்களில் பிரீத்தி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணையாக 120 பவுன் நகை, ₹25 லட்சம் ரொக்கம், சொகுசு கார் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ₹50 லட்சம் கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் குடும்பத்தை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 3, 2026

அபிஷேக்… உங்கள் திறமை எங்கும் போகாது: பாண்டிங்

image

நடப்பு டி20 WC-ல் 6 போட்டிகளில் விளையாடி 3 டக் அவுட் உள்பட வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தடுமாறி வருகிறார். இந்நிலையில், சில நேரங்களில் ஒரு சிறிய சரிவை சந்திக்கும்போது, ​​தினமும் ஒன்றரை மணி நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவது எப்போதும் சிறந்ததல்ல என்றும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம்; உங்கள் திறமைகள் எங்கும் செல்லாது எனவும் அபிஷேக்கிற்கு பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.

News March 3, 2026

பள்ளிகள் 10 நாள்கள் லீவு.. அரசின் கூடுதல் குட் நியூஸ்

image

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இந்த முறை அதிக நாள்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். வழக்கமாக 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24-ம் தேதிக்குள் ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இம்முறை ஏப்., 2-ம் வாரத்திற்குள் தேர்வுகள் முடிவடையுமாம். இதனால், மேலும் 10 நாள்கள் வரை விடுமுறை கிடைக்கும். SHARE IT

News March 3, 2026

குவைத், ஓமனில் இந்தியர்களின் நிலை என்ன? PM ஆலோசனை

image

ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், குவைத் மற்றும் ஓமன் நாட்டு தலைவர்களுடன் PM மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அங்குள்ள அசாத்தியமான சூழல் குறித்து கேட்டறிந்த மோடி, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசித்துள்ளார். ஏற்கெனவே பஹ்ரைன் மற்றும் அபுதாபி இளவரசருடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது ஈரானின் தாக்குதலுக்கு அவர் <<19276042>>கண்டனங்களையும் <<>>பதிவு செய்திருந்தார்.

error: Content is protected !!