News August 7, 2025

இளம் பெண் தற்கொலை.. கணவர் குடும்பத்தோடு கைது

image

திருப்பூரில் ரிதன்யாவை போல் வரதட்சணை கொடுமையால் திருமணமான 11 மாதங்களில் பிரீத்தி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணையாக 120 பவுன் நகை, ₹25 லட்சம் ரொக்கம், சொகுசு கார் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ₹50 லட்சம் கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் குடும்பத்தை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News August 11, 2025

இந்தியாவின் அணையை தகர்ப்போம்: பாக்., தளபதி

image

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அங்கிருந்து இந்தியாவை மிரட்டியுள்ளார். சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால், பாகிஸ்தானின் ஏவுகணைகள் அதை தாக்கி அழிக்கும் எனவும், சிந்து நதி ஒன்றும் இந்தியாவின் குடும்ப சொத்து கிடையாது என்றும் எச்சரித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அணு ஆயுத நாடு என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும், தங்களிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 11, 2025

மத்திய அமைச்சரை காணவில்லை… போலீஸில் புகார்

image

நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் சங்க மாவட்ட தலைவர் கோகுல் போலீஸில் புகார் அளித்துள்ளார். திருச்சூர் MP – யான சுரேஷ் கோபியை 2 மாதங்களாக தொகுதியின் எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். மேயர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரால் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கோகுல் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!