News August 7, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் தாய்மணம் ‘அன்பு கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகளுக்கு 18 வயது வரை உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக ஜே. ராஜசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன் , அரூர் செந்தில் ராஜ்மோகன், பென்னாகரம் குமரவேல், மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

தருமபுரியில் குழந்தை பாக்கியம் அருளும் முக்கிய தலங்கள்

image

குழந்தை பாக்கியம் என்பது பலருக்கு ஒரு கனவாகவே உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டி பலர் மருத்துவத்தை நாடினாலும், இறை வழியிலும் நன்மை நடக்கும் என்று கோயிக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி தருமபுரியில் குழந்தை வரம் அருளும் சில தலங்களுக்கு சென்று வழிபடலாம்.
✔ தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்
✔ அமனிமல்லாபுரம் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்
✔ மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்
ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

தருமபுரி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். சூப்பர் வாய்ப்பு, டிகிரி முடித்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!