News August 7, 2025

நாகை: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

image

நாகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’18’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே க்ளிக் <<>>செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 8, 2025

நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற ஆக.12ம் தேதி காலை10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

மாணவர்களை சாதி பெயர் கூறி பேசியதால் ஆசிரியர் சஸ்பெண்ட்

image

நாகை வஉசி தெருவில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைபள்ளி ஆசிரியர் மரியம் பிரான்சிஸ், மாணவர்களை சாதி பெயர் கூறி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி புகார் குறித்து விசாரணை நடத்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மரியம் பிரான்சிசை நேற்று சஸ்பெண்ட் செய்துள்ளார்.

News August 7, 2025

நாகை: டிகிரி போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து ஆக.,17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. இத்தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!