News August 7, 2025

300 லிட்டர் தாய்ப்பால் தானம்! சாதனை படைத்த திருச்சி பெண்

image

திருச்சி காட்டூரை சேர்ந்த செல்வ பிருந்தா(32), உண்மையான தாய்மையின் உதாரணம். கடந்த 22 மாதங்களில், தனது குழந்தைகளின் தேவைக்கு அதிகமாக சுரந்த 300.17 லிட்டர் தாய்ப்பாலை, திருச்சி மகாத்மா காந்தி ஹாஸ்பிடலுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்காக இந்தியா புக், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ‘பிற குழந்தைகளுக்கும் பாசம் பஞ்சமில்ல’ என உணர்ந்து உதவிய இந்த தாய்க்கு பாராட்டுகள் குவிகிறது.

Similar News

News August 10, 2025

அமைதி பேச்சுவார்த்தையை வரவேற்ற இந்தியா

image

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்றுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதி நிலைநாட்டும் என நம்புவதாக ‘இது போர்களின் காலம் அல்ல’ என்ற பிரதமர் மோடியின் மேற்கோளை சுட்டிக்காட்டி இந்தியா தெரிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் வைத்து டிரம்ப் -புடின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

News August 10, 2025

ஆகஸ்ட் 10: வரலாற்றில் இன்று

image

*610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். *1916- தமிழ் எழுத்தாளரும், இதழாசிரியருமான சாவி பிறந்தநாள். *1948 –இந்திய அணுசக்திப் பேரவையை ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். *1990- நாசாவின் மெகலன் விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது.

News August 10, 2025

மீண்டும் அப்பாவான டென்னிஸ் லெஜெண்ட்

image

டென்னிஸ் லெஜண்ட் ரஃபேல் நடால் மீண்டும் தந்தையாகியுள்ளார். அவரது மனைவி மரியா ஃபிரான்ஸிஸ்கா பெரெல்லோவிற்கு கடந்த 7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு Miquel என பெயர் வைத்துள்ளனர். இது மரியாவின் காலமான தந்தையின் பெயராகும். அவரது நினைவாக குழந்தைக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற நடாலுக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

error: Content is protected !!