News August 7, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> வரும் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

Similar News

News December 9, 2025

கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 360 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு நேற்று கிராம துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் சார்பில் சம்பள உயர்வு வேண்டியும், பணி நிரந்தரம் வேண்டியும் பொது வேலை நிறுத்தமும் சாலை மறியலும் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக 360 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: மனமுடைந்த மதுபிரியர் விபரீத முடிவு!

image

கள்ளக்குறிச்சி: புத்தந்தூரை சேர்ந்த பெரியசாமி குடிப்பழக்கம் கொண்டவர். இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெரியசாமி நேற்று தனது விவசாய நிலத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை?

image

நாட்டார்மங்கலத்தை சேர்ந்த சகி கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6-ம் தேதி பல்கலை தேர்விற்கு செல்போன் எடுத்து சென்றதால் பேராசிரியர் கண்டித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து கல்லூரியில் இருந்து சென்றவர் கோட்டைமேடு பகுதியில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வீசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!