News August 7, 2025
தந்தைக்காகவே அமைதி காக்கும் மகன்: தங்கர் பச்சான்

ராமதாஸின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் அன்புமணி அமைதியாக கடந்து செல்கிறார். இதுகுறித்து தங்கர்பச்சான், தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும் என்று ராமதாசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
கத்தார் எரிவாயு உற்பத்தியை நிறுத்துகிறது

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தியை நிறுத்துவதாக கத்தார் அறிவித்துள்ளது. குறைந்தது ஒரு மாதத்திற்கு சூப்பர் கூல்டு எரிவாயுவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய LNG சப்ளையராக இருப்பதால், இந்த முடிவு நாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எரிவாயு விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.
News March 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 5, 2026
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் இவரா?

திமுக கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் வேட்பாளர் யார் என்பதை டெல்லி தலைமையே அறிவிக்கும் என செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில் அக்கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த இவர் மணிப்பூர், நாகாலாந்து பொறுப்பாளராக உள்ளார்.


