News August 7, 2025
செப்.1 முதல் சம்பள உயர்வு: TCS

TCS நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், ஜூனியர் முதல் நடுத்தர ஊழியர்கள் வரை இதில் பலன் பெறுவர் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, சமீபத்தில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 10, 2025
மீண்டும் மிரட்டுமா லோகேஷ், அனிருத் கூட்டணி?

மாஸ்டரில் தொடங்கிய லோகேஷ் அனிருத் கூட்டணி வெற்றிகரமாக ‘கூலி’ வரை தொடந்து வருகிறது. இதனிடையே அனிருத்துடன் இருக்கும் போட்டோக்களை லோகேஷ் X-ல் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொரு முறை நாம் இணையும் போதும் சரவெடியாகதான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும், இன்னொரு தாயின் வயிற்றில் பிறந்த எனது தம்பி அனிருத் என்றும் தொடர்ந்து கலக்குவோம் Rockstar எனவும் குறிப்பிட்டுள்ளார். கூலியிலும் இந்த கூட்டணி ஜெயிக்குமா?
News August 10, 2025
பொதுமக்களுக்கு பட்டா… வந்தது புதிய அறிவிப்பு

நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரருக்கு பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
News August 10, 2025
மின்சார கட்டணம் உயருமா? SC-யின் புதிய உத்தரவு

SC-யின் புதிய உத்தரவால் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளது. மின்சார விநியோக நிறுவனங்களுக்கு தரவேண்டிய மொத்த நிலுவை தொகையையும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் SC உத்தரவிட்டுள்ளது. 2024 கணக்கின்படி, தமிழக அரசு ₹87,000 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தல் வரை தள்ளிப்போகலாம்.