News August 7, 2025
காலையில் மாரடைப்பு அதிகம் ஏற்படுவது ஏன்?

காலை 6 மணி- 11 மணி வரையில் தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் , ரத்தம் & இதய அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும், ரத்தம் இறுகி, தடிமனாக இருப்பதால், குழாய்களில் தடை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. முதலில் நினைவில் கொள்ளுங்கள், உடல் உழைப்பின்றி இருப்பவர்களுக்கு திடீரென தூக்கத்திலிருந்து அதிர்ந்து போய், எழுவதும் அதிக அழுத்தம்தான்.
Similar News
News August 10, 2025
தம்பதியரே, கொஞ்சம் நெருக்கமாகவும் இருங்கள்

நீண்டகாலம் பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருப்பது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என புளோ ஹெல்த் நிறுவனம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. தம்பதியரிடையே உடல் உறவு இல்லாததால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும், பெண்களுக்கு பிறப்புறுப்பின் ஆரோக்கியம் குறையும், மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படும், ஆண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கும் என்றெல்லாம் ஆய்வு முடிவு கூறுகிறது.
News August 10, 2025
PM மோடி பதவி விலக வேண்டும்: சித்தராமையா

வாக்கு திருட்டு நிரூபணமானதால் PM மோடி பதவி விலக வேண்டுமென CM சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் அண்மையில் குற்றம் சுமத்தினார். இந்நிலையில் வாக்கு திருட்டை கண்டித்து காங்., சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய சித்தராமையா, குறைந்தது 14 தொகுதிகளாவது வென்றிருக்க வேண்டிய காங்., வாக்குத் திருட்டால் தோல்வியடைந்ததாக கூறினார்.
News August 10, 2025
கணவன் – மனைவி உறவை பாதிக்கும் 5 விஷயங்கள்

தாம்பத்ய வாழ்க்கையை பின்வரும் விஷயங்கள் பாதிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்: *வேலை, பிசினஸ், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தீவிர மனஅழுத்தம், பாலியல் நாட்டத்தை பாதிக்கும் *போதுமான தூக்கம் இல்லாதது உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்கும் *ஹார்மோன்கள் சமநிலை பாதித்தல் *தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுதல் *உறவில் திருப்தி ஏற்படாத நிலை போன்றவையும் தாம்பத்ய உறவை பாதிக்கலாம். உங்கள் கருத்து?