News August 7, 2025

மயிலாடுதுறை: அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் காலியாக உள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளார். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.7) மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க…

Similar News

News August 10, 2025

மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புக்கு, இதை தெரிஞ்சிக்கோங்க!

image

மயிலாடுதுறையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 10, 2025

தஞ்சை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!

image

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) யில் 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ₹15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 10, 2025

அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தல்

image

பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைத்தல்,மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!