News August 7, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

image

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று(ஆக.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News August 10, 2025

டிகிரி போதும்… 500 காலியிடங்கள்

image

ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனம்(OICL), அசிஸ்டென்ட் (Class III) பதவிகளில் உள்ள 500 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. குறைந்தபட்ச <>கல்வித்தகுதி<<>>: பட்டப்படிப்பு. வயது 21-30 வயது. சம்பளம்: ₹45,000 வரை. விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ₹850, SC/ST/PWD/EX-SER பிரிவினருக்கு ₹100. விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025. இணையதளம்: https://www.orientalinsurance.org.in/

News August 10, 2025

சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

image

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.

News August 10, 2025

தூய்மை பணியாளர்களுக்கு சீமான் ஆதரவு

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!