News April 6, 2024
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது

நாடு முழுவதும் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லி, ஹரியானா மாநிலங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 3 பச்சிளம் குழந்தைகளை அவர்கள் மீட்டனர். ரூ.5.5 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குழந்தைகளை கடத்தி, விற்று வந்த 7 பேர் கும்பலையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
Similar News
News February 4, 2026
ஹிந்தி திணிப்பு முயற்சிகளை கைவிடுக: தங்கம் தென்னரசு

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்கு தள்ளி ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து X பதிவில், மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தெற்கு ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக ஹிந்தி திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழே முன்னவள், மூத்தவள், முதன்மையானவள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 4, 2026
பட்ஜெட் பற்றி தவெகவிடம் கேட்கக் கூடாது: KAS

தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற விஜய், பட்ஜெட் பற்றி வாய் திறக்காதது சர்ச்சையானது. இந்நிலையில் அதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பட்ஜெட் பற்றி தவெகவின் கருத்தை நீங்கள் கேட்கக் கூடாது; புது இயக்கமான தவெக, TN-ல் ஆட்சியை பிடிக்க வேண்டியுள்ளதால், அதன்பின்தான் அதுகுறித்து கருத்து கூற முடியும் என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
News February 4, 2026
SHOCKING: சிறுமியின் வாயில் வெடித்த சாக்லேட்

ராஜஸ்தானில் சாக்லேட் என நினைத்து வெடிபொருளை சாப்பிட்ட 3 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடையில் வாங்கிய சாக்லேட் சாப்பிட்டபோது, அது வாயிலேயே வெடித்து சிதறியது. இதில் வாய் & தாடை பிளந்து காயமடைந்த சிறுமி ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். கடைக்காரர் சாக்லேட் வடிவிலான வெடிபொருளை சிறுமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


