News August 7, 2025

திருப்பூர் SSI படுகொலை: இருவர் கைது

image

திருப்பூர் உடுமலை அருகே சிக்கனூத்துவில் தந்தை – மகன்களுக்கு இடையிலான சொத்து தகராறை <<17316893>>விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டார்<<>>. இக்கொலை வழக்கில் 3 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியை மாவட்ட எஸ்.பி அலுவலகம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு மகன் மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News

News August 7, 2025

ஆசிய கோப்பை: கங்குலியின் விருப்பம் இதுதான்..

image

ஆசிய கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் இடம்பெற வேண்டும் என கங்குலி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் முகேஷ் சிறப்பாக விளையாடி வருவதாகவும், அவருக்கு கண்டிப்பாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 3 டெஸ்ட், 6 ODI, 17 டி20-களில் விளையாடியுள்ள முகேஷ் இதுவரை 33 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

News August 7, 2025

ரஷ்ய அதிபரை சந்திக்கும் டிரம்ப்

image

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களையும் டிரம்ப் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யாவிற்கு குறிப்பிட்ட நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், தற்போது அந்நாட்டு அதிபரை நேரில் சந்திக்க உள்ளார். பல நாடுகளின் போரை நிறுத்தியதாக கூறி வரும் டிரம்ப்பிற்கு, உக்ரைன் விவகாரம் தலைவலியாக மாறி உள்ளது.

News August 7, 2025

ஆகஸ்ட் 7: வரலாற்றில் இன்று

image

*1906 – கல்கத்தாவில் முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. *1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை ஜப்பானில் விற்பனைக்கு விட்டது.. *1941- ரவீந்திரநாத் தாகூர் இறந்த நாள். *1945 – ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமன் அறிவித்தார். *2018- முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த நாள்.

error: Content is protected !!