News April 6, 2024
நாட்டை சூறையாடுவதே அவர்களின் எண்ணம்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே கூறி வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். I.N.D.I.A கூட்டணியால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுக, காங். கூட்டணி ஜனநாயகத்தை பற்றி பேச முடியாது என்றும், நாட்டை சூறையாடுவதுதான் அவர்களின் எண்ணம் எனவும் அவர் விமர்சித்தார்.
Similar News
News January 17, 2026
விடுமுறை.. அரசு கூடுதல் மகிழ்ச்சியான அறிவிப்பு

தை அமாவாசை தினமான நாளை, பலரும் ராமேஸ்வரத்துக்கு செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். உங்களுக்காகவே அரசு சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று சென்னை, சேலம், கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை மறுமார்க்கமாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
News January 17, 2026
முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை : மூர்த்தி

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை தரப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். ஏற்கெனவே அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேறாதபோது, CM-ன் இந்த அறிவிப்பு எப்படி சாத்தியம்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் பேசிய மூர்த்தி, CM உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும், முக்கிய துறைகளில் வீரர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
சற்றுமுன்: 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

ரஷ்யாவின் நோவோகுஸ்னெட்ஸ்க் பகுதியில் உள்ள பிரபல ஹாஸ்பிடலில் 9 குழந்தைகள் பிறந்து சிலமணி நேரங்களிலேயே அடுத்தடுத்த சில நாள்களில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஹாஸ்பிடலை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. போலீஸார் விசாரித்ததில், டாக்டர்களின் கவனக்குறைவே இறப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து, தலைமை டாக்டர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


