News August 7, 2025
திருச்சி: தாய்ப்பால் தானம் செய்ய அழைப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பால் வங்கிக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 639 பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து 192 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. இது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 634 பிறந்த குழந்தைகளின் நலனுக்கு உதவியுள்ளது. இந்த அளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் இன்னும் அதிகமான தாய்மார்கள் முன்வந்து தானம் செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News August 7, 2025
திருச்சி: வாழை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தின விழா மற்றும் உழவர் தின விழா வரும் ஆக.,21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வாழை விவசாயி விருது, சிறந்த வேளாண் அறிவியல் நிலைய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆக.,14-ம் தேதிக்குள் தாயனூர் தேசிய வாழை ஆராய்ச்சி மைய முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என மைய இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
திருச்சி: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
News August 7, 2025
திருச்சி: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

திருச்சி, பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில்<