News August 7, 2025
விவசாயிகள் மானியத்தில் ஊட்டச் சத்து பெறலாம்

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50% மானியத்தில் ஊட்டச்சத்து பெற்று பயனடையலாம். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
விருதுநகர்: 126 ஆட்டு கிடா, 260 சேவல் பலியிட்டு நேர்த்தி கடன்

விருதுநகர் அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதான பூஜை, 36ம் ஆண்டு பூஜை நடைபெற்றது. இந்த பௌர்ணமி பூஜையில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் நேர்த்திக்கடனாக 126 ஆட்டுக்கடாய், 260 சேவல் பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
News March 5, 2026
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.3200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6105 ஆகவும் பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.20080 ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆக விருதுநகர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.5900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News March 4, 2026
விருதுநகர் : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

விருதுநகர் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <


