News August 7, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள அழைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,09,883 குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 7, 2025
பெண் கொலை வழக்கு: குற்றவாளி கைது

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரை மர்ம நபர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி கொலை செய்தனர். இதுதொடர்பாக புருஷோத்தமன் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நபரை காவல்துறை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் இன்று (07.08.2025) தலைமறைவான குற்றவாளியான ராஜசேகர் என்பவரை கைது செய்துள்ளனர்.
News August 7, 2025
காஞ்சிபுரம்: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஆக.9ம் தேதி பொது விநியோகத் திட்ட முகாம் ஆலப்பாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் சிறுபினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளாவூர், திருபெரும்புதூர் வட்டத்தில் தண்டலம், குன்றத்தூர் வட்டத்தில் பழந்தண்டலம் ஆகிய பகுதியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், பெயர் நீக்கம், புதிய ரேஷன் அட்டை பெற போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். (SHARE)