News August 7, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 7, 2025

கோவையில் 5 முகம், 8 கரங்கள் கொண்ட முருகன்!

image

கோவை: அன்னூர் அருகே இரும்பொறையிலிருந்து 4 கி.மீ தொலைவில் ஓதிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழமையானதாகும். ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள இதை SHARE பண்ணுங்க!

News August 7, 2025

கோவையில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்!

image

கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஏழு மாதங்களில் 4,560 ஆன்லைன் மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இவற்றில், 350-க்கும் மேற்பட்டவை நிதி மோசடி சார்ந்த வழக்குகள் எனவும், 160-க்கும் மேற்பட்டவை பண இழப்பு சார்ந்த வழக்குகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 40-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி புகார்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

News August 7, 2025

கோவை: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!