News August 7, 2025

போராட்டம் தொடரும்: தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

image

பணி நிரந்தரம் செய்யக்கோரியும், தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தூய்மைப் பணியாளர்கள் 6-வது நாளாக சென்னையில் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் K.N.நேரு, சேகர் பாபு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. தனியார்மயமானால் பணியாளர்களுக்கு ஊதியம் குறையும் எனக் கூறிய போராட்டக்குழு ஆலோசகர் குமாரசாமி, அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.

Similar News

News August 7, 2025

வாடகைக்கு மட்டுமே ₹1,500 செலவு: PM வருத்தம்

image

டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பல மத்திய அமைச்சகங்கள் இயங்கி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் போதிய வசதிகள் இன்றி அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றிற்கு வாடகை ₹1,500 கோடி செலவாவதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஆனால், ‘விக்‌ஷித் பாரத்’ தொலைநோக்கு பார்வையின் ஒருபகுதியாக புதிய கட்டிடங்களுக்கு அமைச்சகங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

இனவெறி.. 6 வயது இந்திய சிறுமி மீது தாக்குதல்

image

அயர்லாந்தில் இனவெறி காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும், சைக்கிளை ஏற்றி 12-14 வயது சிறுவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட 5வது தாக்குதலாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

News August 7, 2025

டிரம்ப் விதித்ததற்கு இதுதான் காரணமா?

image

டிரம்ப்பின் 50% வரி விதிப்பிற்கு, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தவிர வேறொரு காரணமும் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா – சீனா உறவு மேம்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். 2019க்கு பிறகு PM மோடி முதல்முறையாக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். BRICS நாடுகள் ஒன்றிணைந்தால் அமெரிக்க டாலருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என டிரம்ப் அச்சப்படுவதாக கூறுகின்றனர்.

error: Content is protected !!