News August 6, 2025

நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

image

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 10, 2025

போதைக்கு எதிரான உறுதிமொழி கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: “போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளிலும் அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவர்களை உள்ளடக்கிய போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 11ஆம் தேதி தமிழ்நாடு தின உறுதிமொழி எடுக்கப்படும்.

News August 10, 2025

காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் நீடிக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் பழவூர், காவல்கிணறு, கலந்தபனை உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி ஏற்ற இறக்கமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று 3000 மெகாவாட்டை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) அதிகபட்ச காற்றாலை மின் உற்பத்தி 2190 மெகாவாட்டாக சரிந்தது.

News August 10, 2025

நெல்லை மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஆக.09) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!