News August 6, 2025

10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், அரியலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக குடையை கூடவே எடுத்துக்கிட்டு போங்க மக்களே..!

Similar News

News December 8, 2025

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 8, 2025

இந்து, இந்தியா என பிரித்து பேசலாமா? சீமான்

image

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.

News December 8, 2025

வங்கியில் 996 காலியிடங்கள், ₹51,000 சம்பளம்: APPLY

image

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ₹51,000. வயது வரம்பு: 20 – 35 வரை. தேர்வு: Personal / Telephonic / Video interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.23. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

error: Content is protected !!