News August 6, 2025
போராட்ட களத்தில் சின்மயி

சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு மாற்றுவதை கண்டித்தும், நிரந்தர வேலை கோரியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையின் வெளியே கடந்த ஆக.1-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பின்னணி பாடகி சின்மயி இன்று நேரில் வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
Similar News
News August 9, 2025
சென்னையில் 15% சாலை விபத்துகள் குறைவு

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
News August 9, 2025
சென்னை: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

சென்னை இளைஞர்களே, IT துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, J2EE, Web Designing, Testing என பல்வேறு Course-கள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு <
News August 9, 2025
சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்

சென்னையில், பேருந்து நிலையங்கள், சாலையோர ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350719>>தொடர்ச்சி<<>>