News August 6, 2025

கேரள மக்களுக்கு வயநாடு போல் மீண்டும் அதிர்ச்சி

image

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்புக்கு பிறகு கேரளாவை சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் மாயமானது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை 30-ம் தேதி நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவின் சோகத்திலிருந்தே 298 பேரின் குடும்பத்தினர் மீளாத நிலையில், தற்போது 28 பேர் மீண்டும் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. 28 பேரும் மீண்டு வர இறைவனை வேண்டுவோம்.

Similar News

News August 13, 2025

சினிமாவில் 50 ஆண்டு நிறைவு! ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து

image

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ படம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ரஜினிக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினிக்கு திரைத்துறை பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

News August 13, 2025

டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

image

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News August 13, 2025

தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி

image

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுக்குழுவால் தலைவராக தேர்வானதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை (EC) அன்புமணி நாடவிருக்கிறார்.

error: Content is protected !!