News August 6, 2025
ராஜபாளையத்தில் எடப்பாடியின் நாளைய கூட்டங்கள் ரத்து

’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பேரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நாளை(ஆக.7) ராஜபாளையம் வர உள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலநிலை மாற்றத்தால் உடல் சோர்வு, தொண்டைவலி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே உடல்நலனை கருதி ராஜபாளையத்தில் நாளை காலை பங்கேற்க இருந்த உள்அரங்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
விருதுநகர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 7, 2026
சிவகாசியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு

சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து, சிவகாசி பகுதி மாரனேரி சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் கிளியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பாண்டி (42) என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் முத்துபாண்டியை கைது செய்தனர்
News March 7, 2026
விருதுநகர்: விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.71 கோடி வரவு!

விருதுநகர் மாவட்டத்தில் 3,560 விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.71 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விருதுநகர் மண்டலத்தில் 2025-26 காலகட்டத்தில் 34 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடந்த 4-ம் தேதி வரை 29,796 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.71,01,20,229 வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்


