News August 6, 2025
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்கா: EPS

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது திருப்பூர் சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் மத, சாதி சண்டைகள் இன்றி தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது என்றும், ரவுடிகள் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்றதாகவும் கூறினார். ஆனால் தற்போது காவல்துறை அதிகாரியே வெட்டிப்படுகொலை செய்யப்படுகிறார் என்று தெரிவித்தார்.
Similar News
News August 10, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி, இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.
News August 10, 2025
அடுத்த சேவாக் இவர் தான்: கிளார்க்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்த சேவாக்கை கண்டுபிடித்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் சேவாக்கை போல் நிறைய சாதிப்பார் எனவும், அவரது பேட்டிங் திறன், ஆதிக்கம் தனக்கு அதையே நியாபகப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜெய்ஸ்வால் களத்தில் இருப்பது எதிரணியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
ரோலக்ஸ் நிறுவனர் ஒரு நாஜி உளவாளி?

புகழ்பெற்ற வாட்ச் பிராண்டான ரோலக்ஸின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டார்ஃப், ஒரு நாஜி உளவாளி என பிரிட்டிஷ் உளவுத்துறை வகைப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் குடிமகனாக அவர் இருந்தாலும், ஹிட்லர் மீது அதீத பற்று கொண்டவர் என 2-ம் உலகப்போர் காலகட்ட பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரிக்க வரலாற்று ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை தற்போது ரோலக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது.