News August 6, 2025
தாட்கோ சார்பில் சுகாதார உதவியாளர் பயிற்சி

நாகை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் டால்மியா பாரத் நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகிட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
Similar News
News August 10, 2025
நாகை புத்தகத் திருவிழாவில் பழமையான கார் கண்காட்சி

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நான்காவது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று முதல் பழமையான கார் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. நாளை (ஆக.11) வரை நடைபெறும் இந்த கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த மகிழுந்துகள் இதில் இடம் பெற்றுள்ளன.
News August 10, 2025
நாகை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை!

வண்டுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், செவிலியர், மருந்தாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.18.000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு 8th முதல் டிகிரி முடித்தவர்கள் <
News August 10, 2025
நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

நாகை மாவட்டத்தில் மக்காச்சோளம் உற்பத்தியைப் பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காச்சோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். SHARE IT NOW!