News August 6, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

image

கள்ளக்குறிச்சி, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக 8 ஜனவரி 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க 40 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா. இந்த மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள், 24 உள்வட்டங்கள், 6 பேரூராட்சி, 412 ஊராட்சி உள்ளன. ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 7, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், பாலின நிபுணர்கள், கணக்கு உதவியாளர், கணக்கு தரவு பதிவாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான தகுதி, விண்ணப்ப படிவம், படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவற்றை இந்த <>லிங்கில் <<>>பெறலாம். பணியின் அடிப்படையில் ரூ.20,000 – ரூ.35,000 வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்

News August 7, 2025

முதல்வர் விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளன. 27 வகையான விளையாட்டுகளுக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் 5 பிரிவுகளின் கீழ் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், வருகிற ஆகஸ்ட் 16-க்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> வரும் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

error: Content is protected !!