News April 6, 2024
ஓசூர்: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

ஓசூர் அருகே சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்
வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 29, 2025
கிருஷ்ணகிரி மதுபிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் (டிச-29) (திங்கட்கிழமை) அன்று முதல் வாடிக்கையாளர்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10/- கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்பட்ட காலி பட்டிலின் அதே கடையில் திருப்பி கொடுத்து ரூ.10/-னை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். என கிருஷ்ணகிரி டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்
News December 28, 2025
கிருஷ்ணகிரி: ஹோட்டலில் தரமற்ற உணவா?

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (டிச-28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


