News August 6, 2025
திருச்சி: பொதுத்தேர்வு அசல் சான்றிதழ் நாளை விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.07) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

திருச்சி, லால்குடி அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News August 9, 2025
திருச்சி பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாராந்தர தேர்வுகள் வரும் ஆக.,11-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனை பள்ளி பாடவேளையில் நடத்த கூடாது. மாறாக இதனை சிறப்பு வகுப்பு நேரம், உணவு இடைவேளை நேரம் மற்றும் காலை நேரத்தில் நடத்த வேண்டும் என திருச்சி மாவட்டக்கல்வி அலுவலர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
News August 9, 2025
திருச்சி மக்களே இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
✅இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!