News August 6, 2025

ஈரோடு: பட்டா மாற்றம் செய்வது ரொம்ப ஈசி!

image

ஈரோட்டில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு <>இந்த வெப்சைட்டில்<<>> போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும். இத SHARE பண்ணுங்க.

Similar News

News December 8, 2025

பெருந்துறை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண் கைது

image

பெருந்துறை அருகே 42 வயது பெண், தன் மகனுடன் படிக்கும் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டார்.
​நண்பனாக வீட்டிற்கு வந்த மாணவனுடன் பழகி அப்பெண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவன் வீட்டிற்குச் செல்லாமல் அப்பெண்ணின் வீட்டிலேயே தங்கியதால், மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து, போலீசார் பெண்ணை கைது செய்தனர்.

News December 8, 2025

பெருந்துறை அருகே பெண் கொடூரக் கொலை!

image

பெருந்துறை அருகே தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (60) இவர் மனைவி விஜயா(52) இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சொத்து விற்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காஞ்சி கோவில் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை செங்கோட்டையன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். காயமடைந்த விஜயா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

News December 8, 2025

சித்தோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற சித்தோடு போலீசார் 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், கருங்கல்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் (33) மற்றும் ஹரிபிரசாத் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!