News August 6, 2025

விருதுநகர்: 239 பேரிடம் மோசடி செய்தவர் குண்டாஸில் கைது

image

சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன் ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாகவும், மாதம் ரூ.50,000 லாபம் பெறலாம் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 239 பேரிடம் ரூ.12 கோடி பெற்று மோசடி செய்து ஜூலை.7 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News August 17, 2025

விருதுநகரில் அரசு வேலை வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். A<>PPLY<<>> இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 19-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News August 17, 2025

விதிமீறிய 77 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958-ன் படி சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள் மற்றும் நிறு வனங்கள், 40 உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 77 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது சம்பளபட்டு வாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

News August 17, 2025

விருதுநகர்: உங்க ஊரு GH நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

image

விருதுநகர் மக்களே.. EMERGENCY நேரத்துல உங்க ஊரு GOVT HOSPITALக்கு போகும் போதே கால் பண்ணி அங்க தாமதம் ஏற்படாம ஒரு உயிரை காப்பாத்துங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722
அருப்புக்கோட்டை – 04566220264
இராஜபாளையம் – 04563221301
காரியாபட்டி – 04566255130
சாத்தூர் – 04562260215
சிவகாசி – 04562220301
திருச்சுழி – 04566282141
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220

error: Content is protected !!