News August 6, 2025
மழையில் ஃபோன் நனையாமல் காக்க…

மழையில் உங்கள் ஃபோன் நனையாமல் காக்க, எப்போதும் வாட்டர்புரூப் பவுச் வைத்திருக்கவும் *ஜிப்லாக் பவுச் மற்றும் சிலிகா ஜெல் பாக்கெட்களும் உங்கள் போன் ஈரமாகாமல் காக்கும் *அழைப்புகளை ஏற்க புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தலாம் *மழையில் போனில் ஈரம் புகுந்துவிட்டால், சார்ஜ் போடுவதை கட்டாயம் தவிர்க்கவும் *அரிசிக்குள் (அ) சிலிகா ஜெல் பாக்கெட்கள் கொண்ட ஜிப்லாக் கவரில் ஈரம் உறிஞ்சப்படும் வரை போட்டு வைக்கலாம்.
Similar News
News August 7, 2025
4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு வேலை: CM

கடந்த 4 ஆண்டுகளில் அரசு, தனியார்கள் மூலமாக 6,41,664 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ₹10.63 லட்சம் கோடிகள் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் 2வது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News August 7, 2025
ஆடி வியாழக்கிழமை எந்த தெய்வத்தை வணங்கலாம்?

ஆடி மாதம் ஒவ்வொரு கிழமையும் சில தெய்வங்களுக்கு விசேஷ வழிபாடு இருக்கும். அப்படி வியாழக்கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கலாம் என்று பார்ப்போம். இந்நாளில் நாம் குருவாக எண்ணும் எந்த மகான்களைப் போற்றி வணங்கலாம். உதாரணமாக சாய்பாபா, ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான்களை ஆராதனை செய்யலாம். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படித்தால் கல்வி மேன்மை பெறும் என நம்பப்படுகிறது.
News August 7, 2025
அஜித்துடன் கைகோர்த்த நரேன் கார்த்திகேயன்

அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் தமிழரான நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நரேன் தங்களது அணியில் இணைவது பாக்கியம் என அந்நிறுவனம் கூற, வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்துடன் சேர்ந்து பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக நரேன் தெரிவித்துள்ளார். ஃபார்முலா – 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் நரேன் என்பது குறிப்பிடத்தக்கது.