News August 6, 2025

தருமபுரி: டிகிரி முடித்திருந்தால் போதும்! கை நிறைய சம்பளம்

image

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <>இணையத்தில் <<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 7, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் தாய்மணம் ‘அன்பு கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகளுக்கு 18 வயது வரை உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

தருமபுரி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> வரும் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News August 7, 2025

தர்மபுரியில் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி பகுதி சேர்ந்த குப்பன் மகன் மாரியப்பன்(45), கூலி தொழிலாளி. கடத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற போது தர்மபுரியில் இருந்து வந்த வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடத்தூர் போலீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!