News August 6, 2025

நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டு திட்ட தேதி நீட்டிப்பு

image

மதுரை மாவட்டத்தில் குறுவை பருவ நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டு திட்டம் ஆக.14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகளில் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு நகல், ஆதார் அட்டையுடன் பதிவு செய்யலாம். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.720 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 17, 2025

மதுரையில் இலவச பயிற்சியுடன் தொழில் துவங்க கடன்

image

பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட தொழில் மையத்தில் உணவுத் துறையில் தொழில் வளர்ச்சி குறித்து ஆக. 21 முதல் 23 வரை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் உதவித்தொகையுடன் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 10லட்சம், 3 % வட்டி மானியம் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 97915 41990. அழைக்கவும். தொழில் துவங்க நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க.

News August 16, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

இயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்

image

இரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி எழுதிய கடிதத்தில்; “தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட 3 மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே இரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது. தமிழ் கேள்வித்தாளுடன் மறு தேர்வு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!