News April 6, 2024

களத்தில் இறங்கிய ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்.19 அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைந்த வாக்கு சதவீதம் உடைய வாக்குச்சாவடி மையங்கள் உள்ள பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேடுகளை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தர்ப்பகராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News

News April 19, 2025

திருப்பத்தூர்: வெயில்த் தாங்க முடியலையா…? இங்க போங்க

image

திருப்பத்தூரில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிகள், இந்த இயற்கை அதிசயமானது 50 அடி உயரத்திலிருந்து கீழே விழும் நீரின் மூச்சடைக்கக்கூடிய அடுக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பசுமையான காடுகள், மலைகளிலுள்ள பறவைகளின் இனிமையான இசையால் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆச்சிரியம் தரும். கோடைகாலத்தில் குளிர்ச்சியான இடத்திற்கு போக நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 19, 2025

திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.

News April 19, 2025

ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை திறமையில் கையெழுத்திட தடை

image

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையை பயன்படுத்தி வருவதால் அது குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-ன் படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தடை செய்து ஊராட்சி உதவி இயக்குனர் உத்தரவு

error: Content is protected !!