News August 6, 2025

திருவாரூர்: விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

image

தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம், நீடாமங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் விவசாயிகளுக்கு 20 எக்டேருக்கு மானிய விலை மக்காச்சோளம் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படத் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில் இடுபொருட்களைப் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 7, 2025

திருவாரூரில் உள்ள காசிக்கு நிகரான தலம்

image

திருவாரூர், நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் ஶ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர். மேலும் இங்கு எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த கோயிலில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் காசிக்கு நிகரான தலமாக கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 7, 2025

திருவாரூரில் பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <>eservices.tn.gov.i<<>>n என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யவும்!

News August 7, 2025

நெகிழி பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!