News August 6, 2025
BREAKING: தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 7, 2025
ஆசிய கோப்பை: ஸ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா?

வரும் செப்.9-ம் தேதி தொடங்க ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல்லில், 175 ஸ்டிரைக் ரேட்டில் 600+ ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயருக்கு அணியில் இடம்கிடைக்குமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் முதல் அவர் சர்வதேச டி20-களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
75% வருகை கட்டாயம்: CBSE

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கட்டாயம் 75% வருகை பதிவேட்டை கொண்டிருப்பது அவசியம் என CBSE தெரிவித்துள்ளது. இந்த வருகை பதிவுகளை கொண்டிருக்காத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும், அவசரநிலை, மெடிக்கல் எமெர்ஜென்ஸி, தேசிய / சர்வதேச போட்டிகளால் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு 25% தளர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
News August 7, 2025
டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுமினியம், ரயில்வே, சுரங்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இதன்மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது.