News August 6, 2025

அதி நவீன ஏவுகணைகளை களமிறக்க முடிவு

image

ஆபரேஷன் சிந்தூரின் போது நமது பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழு விரைவில் கூட உள்ளது. இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன.

Similar News

News August 6, 2025

10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், அரியலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக குடையை கூடவே எடுத்துக்கிட்டு போங்க மக்களே..!

News August 6, 2025

ஒரு ரூபாய் செலவில்லை… இலவச மருத்துவ ஆலோசனை

image

மத்திய அரசின் தொலைதூர மருத்துவ சேவை தான் இ-சஞ்சீவனி (esanjeevani.in) திட்டம். இதன்மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தொலைபேசி / வீடியோ கால் அழைப்பு மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனையுடன் டாக்டர் இ-பிரிஸ்கிரிப்ஷனும் கொடுப்பார். இதை பார்மஸியில் காட்டி மருந்துகளும் வாங்கலாம். ஆயுர்வேத டாக்டர்களிடமும் ஆலோசனை பெறலாம்.

News August 6, 2025

அன்புமணிக்கு எதிராக வழக்கு தொடுத்த ராமதாஸ்

image

பாமக பொதுக்குழு கூட்டம் ஆக. 17-ம் தேதி நடைபெறும் என ராமதாஸ் தரப்பிலும், ஆக.9-ம் தேதி நடைபெறும் என அன்புமணி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னைத்தானே தலைவர் என கூறிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், ஆகையால் அவர் கூட்டும் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டுமென ராமதாஸ் தரப்பில் சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

error: Content is protected !!