News April 6, 2024
பெரம்பலூர்: பதற்றமான சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2026
பெரம்பலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

பெரம்பலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 9, 2026
குன்னம் வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு குன்னம் சட்டமன்றத் தொகுதி சிறுகடம்பூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். மேலும் வாக்கு சாவடி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை குறித்தும் கேட்டறிந்தார்.
News April 9, 2026
பெரம்பலூர்: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


