News August 6, 2025
நெல்லை: மேயர் தலைமையில் குறைத்தீர் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனு பெற்றார். மாநகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே ஆர் ராஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 7, 2025
நெல்லை: 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

நெல்லை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இங்கே <
News August 7, 2025
நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.