News August 6, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியின் டிபோர் வளாகத்தில் நாளை காலை 9:30 மணியளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கண்ட புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
வேலூர் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கமே ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக “DRUG FREE TN” என போதை பொருட்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 9 காலை 5:30 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி நேதாஜி ஸ்டேடியம் வரை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 30 வயது வரை ஆண்/பெண், 30 வயதிற்கு மேற்பட்டவருக்கான ஆண்/பெண் என 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்