News August 6, 2025
நெல்லையில் அடுத்த பயங்கரம்: 16 வயது சிறுவனுக்கு வெட்டு

கவின் ஆணவப்படுகொலை சம்பவத்தின் அதிர்ச்சியே ஒயாத நிலையில், சேரன்மகாதேவியில் வீடு புகுந்து பள்ளி மாணவனை 5 சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவியுடன் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவன் பழகியதால் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவன் சிகிச்சையில் உள்ள நிலையில், 5 சிறார்களும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News August 6, 2025
TN வளர்ச்சியை எல்.முருகனால் தாங்க முடியவில்லை: அப்பாவு

தமிழக அரசு வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு தடைகள் செய்ய முடியுமோ அதனை செய்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு குற்றம் சுமத்தியுள்ளார். தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என எல்.முருகன் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% என்றும், இந்த வளர்ச்சியை தாங்க முடியாமல் அவர்கள் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
News August 6, 2025
சரிவுடன் முடிந்த இந்தியப் பங்குச்சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிந்து 80,543 புள்ளிகளிலும், நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 24,574 புள்ளிகளிலும் முடிந்தன. Infosys, Wipro, Tech Mahindra, Sun Pharma உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News August 6, 2025
தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய ‘கிங்டம்’ படக்குழு

ஈழத் தழிழர்கள் குறித்து தவறாக சித்தரித்ததாக கூறி தமிழகத்தில் ‘கிங்டம்’ படத்தை திரையிட நாதக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் தமிழ் மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம் என ‘கிங்டம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கிங்டமில் இடம்பெற்ற காட்சிகள் கற்பனையானவை மட்டுமே எனவும் மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.