News August 5, 2025
திருச்சி: அமைச்சரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் ஊடகச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனை திருச்சி டிஸ்ட்ரிக்ட்பிரஸ் & மீடியா கிளப், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம், கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம், தமிழக நிருபர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று மாலை நேரில் சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்தனர்.
Similar News
News March 11, 2026
EPS வருகை; முன்னாள் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். இந்நிலையில் அவரை வரவேற்க முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்கூட்டியே அனுமதி கடிதம் வழங்காததால், அவர்களை விஐபி அறைக்குள் அனுமதிக்க முடியாது என விமான நிறைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News March 11, 2026
திருச்சியில் பிரதமர் தொடங்கி வைக்கும் முக்கிய திட்டங்கள்!

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
News March 11, 2026
பொது தேர்வு தொடக்கம் – அமைச்சர் வாழ்த்து

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதல் பொதுதேர்வை எழுத உள்ளீர்கள். அந்த எக்சைட்மென்ட் இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்க கூடாது. மற்ற தேர்வுகளை போல இதுவும் ஒரு தேர்வுதான். மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். ஆல் தி பெஸ்ட் என அவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


