News August 5, 2025
BREAKING: போர்நிறுத்தத்தை மீறியது பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதி அருகே பாக்., ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்த நமது ராணுவம் சரியான பதிலடி தந்தது. இந்த சண்டை 15 நிமிடம் நீடித்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லையென கூறப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 7, 2025
பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு

நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவு விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வ விண்ணப்பங்கள் பெற்று, சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
News August 7, 2025
சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள ஒரே தனி கோயில்!

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி கோயில்தான், தமிழகத்தில் சரஸ்வதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரே தனி கோயிலாகும். ஒட்டக்கூத்தருக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்த இடம் இது எனக் கூறப்படுகிறது. வெள்ளை நிற ஆடையில், வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறார் சரஸ்வதி. முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தில் இங்கு நடைபெறும் பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
News August 7, 2025
திமுகவில் ஐக்கியமான அதிமுக மாவட்ட நிர்வாகி!

கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.