News August 5, 2025
கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு திசை, கேது திசை நேரமாக இருந்தால் அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?
Similar News
News December 7, 2025
34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்கே: H ராஜா

திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கிடையே, H ராஜா முதன்மை ரோலில் நடித்துள்ள ‘<<18493915>>கந்தன் மலை<<>>’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இதுதொடர்பாக பேசிய H ராஜா, 1310-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆட்சி செய்த சுல்தான்கள், பல இந்து கோயில்களை இடித்தனர் என்றார். இதுதொடர்பாக 1930-ல் வழங்கிய லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில், 34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருப்பதாகவும் அவர் கூறினார்.
News December 7, 2025
இந்த தலையணை மந்திரத்தை மறந்துடாதீங்க..

வசதியாகவும், அலுப்பு இல்லாமல் இருப்பதற்காகவும் தேடித்தேடி தலையணையை தேர்ந்தெடுக்கும் கவனம், அதனை சுத்தம் செய்வதிலும் இருக்க வேண்டும். தலையணை உறையை 3 – 4 நாள்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். தலையணையை 6 மாதங்களுக்கு ஒருமுறையும் வெயிலில் காய வைக்க வேண்டும். போர்வைகளை 2 – 3 மாதங்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். ஏனென்றால், தலையணை உறையில் டாய்லெட்டுக்கு இணையான பாக்டீரியாக்கள் இருக்குமாம். SHARE IT.
News December 7, 2025
புதுசா இருக்குண்ணே.. விரைவில் பராசக்தி கண்காட்சி?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ லாஞ்ச், ஜன., முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 1960 காலகட்ட பொருட்களின் மாதிரிகளை கண்காட்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற பெயரில், டிச.16 முதல் ஒரு வாரத்துக்கு கண்காட்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


