News August 5, 2025
வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடுப்பு முயற்சிக்கு ஆதரவு தேவை

வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டார். பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கவும், பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை முன்னெடுக்கவும் மக்கள் ஆதரவு தேவை என்றும், தடுப்புப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Similar News
News August 17, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News August 17, 2025
வேலூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
News August 17, 2025
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு 6 மையங்களில் இன்று(ஆக.17) நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,823 பேர் எழுதினார். வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடன் இருந்தார். தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது