News August 5, 2025
விழுப்புரத்தில் நாளை மாபெறும் தமிழ் கனவு

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கூட்ட அரங்கில் நாளை (ஆக.6) காலை 10 மணிக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியார் ஷே.ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை, சமூக சமத்துவம் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <
News August 7, 2025
விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (ஆக.06) நடைபெற்றது. உடன் உதவி ஆணையர்(கலால்) ராஜு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், உதவி இயக்குநர் (திறன் பயிற்சிகள்) சிவசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
News August 6, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று (ஆக.06) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.