News August 5, 2025
தென்காசி: நாய் கடித்து 3 பேர் காயம்

தென்காசி, கடையநல்லூர் மக்கா நகர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்தனர். 3வரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை தெருநாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடையநல்லூர் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.
Similar News
News August 7, 2025
தென்காசி கரடி தாக்கியதில் 3 பெண்கள் படுகாயம்

தென்காசி, புளியங்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்ற ஷேகம்மாள்(52) அம்பிகா(40) ராமலட்சுமி(46) என்ற 3 பெண்களை அங்கிருந்த கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் அங்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News August 7, 2025
தென்காசி : 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

தென்காசி மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
News August 7, 2025
தென்காசியில் போக்குவரத்து மாற்றம்!

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு (ஆகஸ்ட்.07) இன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் நகர பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. திருநெல்வேலி, ராஜபாளையம், கோவில்பட்டி, தென்காசி போன்ற ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளுக்கு மாற்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தபட்டுள்ளன. SHARE பண்ணுங்க.