News August 5, 2025

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி ஆட்சியர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தர்மபுரியை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அடையாள அட்டை எண்ணினை பதிவு செய்யாமலோ அல்லது இதுவரை தங்களின் குடும்ப நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படாமலோ இருந்தால் தர்மபுரி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சென்று கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். *உங்களுக்கு தெரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பகிரவும்*

Similar News

News August 6, 2025

தருமபுரியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

image

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (9445000908) எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!

News August 6, 2025

தருமபுரி: டிகிரி முடித்திருந்தால் போதும்! கை நிறைய சம்பளம்

image

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <>இணையத்தில் <<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 6, 2025

தர்மபுரி மாவட்டத்தின் பெய்த மழை அளவு

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரூரில் 42.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கம்பைநல்லூரில் 32.2 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மி.மீ, தீர்த்தமலையில் 6.6 மி.மீ, பாலக்கோடு சுகர்மில்லில் 6.5 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மற்றும் ஒகேனக்கல்லில் 3 மி.மீ மழையும், பென்னாகரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!